1. "தித்திக்கும் தெள்அமுதாயத் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே"என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
Answer: தமிழ்விடு தூது
2. "வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே"என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்?
Answer: தமிழ்விடு தூது
3. தமிழ்விடு தூது ஆசிரியர் யார்?
Answer: பெயர் தெரியவில்லை
4. குறம், பள்ளு என்பதன் பொருள் என்ன?
Answer: சிற்றிலக்கிய வகைகள்
5. மூன்றினம் என்பது?
Answer: துறை, தாழிசை, விருத்தம்
6. திறமெல்லாம் என்பதன் பொருள் என்ன?
Answer: சிறப்பெல்லாம்
7. சிந்தாமணி என்பதன் பொருள் என்ன?
Answer: சிதறாத மணி (சீவகசிந்தாமணி)
8. சிந்து என்பதன் பொருள் என்ன?
Answer: ஒருவகை இசைப்பாடல்
9. அமைதி, மேன்மை ஆகியவற்றைக் சுட்டும் குணம் எவை?
Answer: சத்துவம்
10. சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம்?
Answer: தாமசம்
11. போர், தீவிரமான செயல்களை குறிக்கும் குணம்?
Answer: இராசசம்
12. ஊனரசம் என்பதன் பொருள் என்ன?
Answer: குறையுடைய சுவை
13. தமிழையே தூது ஆக்கிய நூல்?
Answer: தமிழ் விடு தூது
14. இரண்டு கண்களைப்போல் இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு ----- என்று பெயர்?
Answer: கன்னி
15. தமிழ்ல் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையல் தொடுக்கப்படும் செய்யுள் வகை ----- ஆகும்?
Answer: கண்ணி
16. தேவர்களுடைய மூன்று குணங்கள் எவை?
Answer: சத்துவம், இராசசம், தாமசம்
17. மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் எத்தனை?
Answer: 5 (வெண்மை, கருமை, செம்மை, பொம்மை, பசுமை)
18. தமிழ் மொழி தூங்கிசை வண்ணம் முதலாக, இடைமெல்லிசை வண்ணம் ஈறாக ----- வண்ணங்களை கொண்டுள்ளது?
Answer: நூறு
19. சுவை எத்தனை வகைப்படும்?
Answer: 6
20. செவிக்கு விருந்தளிக்கும் தமிழ் மொழி எத்தனை சுவைகளை பெற்றுள்ளது?
Answer: 9சுவை (வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
1
21. தமிழ் மொழிக்கு அழகுகள் எத்தனை?
Answer: 8 (அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு)
22. முத்திக்கனி இலக்கணக்குறிப்பு தருக?
Answer: உருவகம்
23. தெள்ளமுது இலக்கணகுறிப்பு தருக?
Answer: பண்புத்தொகை
24. குற்றமிலா இலக்கணக்குறிப்பு தருக?
Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயர்ரெச்சம்
25. நா இலக்கணக்குறிப்பு தருக?
Answer: ஓரெழுத்து ஒருமொழி
26. செவிகள் உணவான இலக்கணக்குறிப்பு தருக?
Answer: நான்காம் வேற்றுமைத்தொகை
27. சிந்தா மணி இலக்கணக்குறிப்பு தருக?
Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
28. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் பெயர்களில் அழைக்கப்படுவது?
Answer: தமிழ்விடு தூது
29. தூது எவ்வகை இலக்கியம்?
Answer: சிற்றிலக்கியம்
30. தூது அனுப்பும் பொருட்களின் எண்ணிக்கை?
Answer: பத்து
31. தமிழ்விடு தூது எக்கடவுளை தலைவனாக கொண்டு பாடப்பட்டது?
Answer: மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்
32. தமிழ்விடு தூது எந்த வெண்பாவால் இயற்றப்பட்டது?
Answer: கலிவெண்பா
33. தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது?
Answer: 268
34. தமிழ் விடு தூது வை யார் புதுப்பித்த ஆண்டு?
Answer: உ. வே. சா
35. தமிழ்விடு தூதுவை உ. வே. சா புதுப்பித்த ஆண்டு?
Answer: 1930ஆண்டு
36. தமிழ் விடு தூதுவில் யார் மீது பெண் காதல் கொள்கிறாள்?
Answer: மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதர் மீது
37. "காதொலிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: கவியோகி சுத்தானந்த பாரதியார்
2