10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - நிலா-முற்றம் - முத்துக்குமாரசாமி-பிள்ளைத்தமிழ்

  Play Audio

1. முத்துக்குமாரமசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் யார்?

Answer: குமரகுருபரர்

2. குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்து தருவது எது?

Answer: பிள்ளைத்தமிழ்

3. "செம்போ நடிச்சிறு கிங் கினியோடு சிலம்பு கலந்தாட" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?

Answer: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

4. பண்டி என்பதன் பொருள் என்ன?

Answer: வயிறு

5. அசும்பிய என்பதன் பொருள் என்ன?

Answer: ஒளி வீசுகிற

6. மூச்சி என்பதன் பொருள் என்ன?

Answer: தலையுச்சிக் கொண்டை

7. செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலையின் 5 - 6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தை ----- என்பர்?

Answer: செங்கீரைப் பருவம்

8. சேயுடன் மகிழ்ந்து குலாவும் தாய் சுவரோவியம் எங்கு உள்ளது?

Answer: சிதம்பரம் 17 - ஆம் நூற்றாண்டு

9. சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும்?

Answer: 96

10. பிள்ளைத்தமிழ் எந்த வகை இலக்கியம்?

Answer: சிற்றிலக்கியம்

11. இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைய தலைவனாக கொண்டு அவரை குழந்தையாக கருதி பாடுவது?

Answer: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

1

12. பாட்டுடை தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது எது?

Answer: பிள்ளைத்தமிழ்

13. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?

Answer: ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பார் பிள்ளைத்தமிழ்

14. பிள்ளைத்தமிழ் எத்தனை பாடல்களால் ஆனது?

Answer: 100பாடல்கள், 10 பருவம், பருவத்திற்கு 10 பாடல்கல்

15. குமரகுருபரின் காலம் என்ன?

Answer: 17 - ஆம் நூற்றாண்டு

16. குமரகுருபரர் எந்த மொழியில் புலமை பெற்றவர்?

Answer: தமிழ், வடமொழி, இந்துஸ்தானி

17. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை?

Answer: கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை

18. இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் யாவை?

Answer: காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி

19. ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் பருவங்கள் யாவை?

Answer: சிற்றில், சிறுபறை, சிறுதேர்

20. பெண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை?

Answer: கழங்கு, அம்மானை, ஊசல்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்