10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - நான்காம்-தமிழ் - பரிபாடல்

  Play Audio

1. "விசும்பில் ஊழி ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: கீரந்தையார்

2. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று எது?

Answer: பரிபாடல்

3. ஓங்கு பரிபாடல் என்ற பெருமையுடைய நூல் எது?

Answer: பரிபாடல்

4. பரிபாடலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்?

Answer: 70 பாடல்கள்

5. பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?

Answer: 24

6. சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?

Answer: பரிபாடல்

7. நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி என்று கூறும் நூல் எது?

Answer: பரிபாடல்

8. விசும்பு என்பதன் பொருள் என்ன?

Answer: வானம்

9. ஊழி என்பதன் பொருள் என்ன?

Answer: யுகம்

10. ஊழ் என்பதன் பொருள் என்ன?

Answer: முறை

1

11. ஆர்தருபு என்பதன் பொருள்?

Answer: வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

12. ஈண்டி என்பதன் பொருள் என்ன?

Answer: செரிந்து திரண்டு

13. பீடு என்பதன் பொருள் என்ன?

Answer: சிறப்பு

14. தண்பெயல் என்பதன் பொருள் என்ன?

Answer: குளிர்ந்த மழை

15. ஊழ்ஊழ் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: அடுக்குத்தொடர்

16. வளர்வானம் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினைத்தொகை

17. செந்தீ என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: பண்புத்தொகை

18. வாரா (ஒன்றன்) என்பதன் இலக்கணைக்குறிப்பு என்ன?

Answer: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

19. நம் பால் வீதிகள் போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்த ஆண்டு?

Answer: 1924

20. 1300 ஆண்டுகளுக்கு முன்னரே அண்டப் பகுதியை பற்றி எழுதியவர் யார்?

Answer: மாணிக்கவாசகர

21. "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" என்ற திருவாசகப் பாடலை பாடியவர் யார்?

Answer: மாணிக்கவாசகர்

22. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, இயற்கையை புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை எந்த நூல் மூலம் அறியலாம்?

Answer: சங்க இலக்கியம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்