10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிரின்-ஓசை - கேட்கிறதா-என்குரல்

  Play Audio

1. உயிரினங்களின் முதன்மை தேவை எது?

Answer: மூச்சுக்கு காற்று, தாகத்திற்கு நீர், உறைவதற்கு நிலம், ஒளிக்கும் கதிரவன்

2. உயிர்களின் உயிர் மூச்சு எது?

Answer: காற்று

3. உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?

Answer: தொல்காப்பியர்

4. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என்று கூறியவர் யார்?

Answer: திருமூலர்

5. திருமூலர் இயற்றிய நூல் எது?

Answer: திருமந்திரம்

6. "வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம்" என்று கூறியவர் யார்?

Answer: ஒளவையார்

7. காற்றின் வேறு பெயர்கள் யாவை?

Answer: காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி

8. பருவநிலை, சூழல், வீசும், வேகத்தைப் பொருத்து காற்றின் பெயர்கள் யாவை?

Answer: தென்றல்காற்று, பூங்காற்று, கடல்காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல்காற்று, கீழ்காற்று, மென்காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, பேய்க்காற்று, சூறாவளிக்காற்று, சுழல்காற்று

9. கிழக்கு என்பதற்கு பொருள் என்ன?

Answer: குணக்கு

10. கிழக்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கொண்டல்

1

11. மழைக்காற்று என அழைக்கப்படுவது?

Answer: கொண்டல்காற்று

12. மேற்கு என்பதன் பொருள் என்ன?

Answer: குடக்கு

13. மேற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கோடை

14. வெப்பக் காற்று என்று அழைக்கப்படுவது?

Answer: கோடைக்காற்று

15. வடக்கு என்பதன் பொருள் என்ன?

Answer: வாடை

16. வடக்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: வாடைக்காற்று

17. ஊதைக் காற்று என்று அழைக்கப்படுவது?

Answer: வாடைக்காற்று

18. தெற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தென்றல் காற்று

19. இதமான காற்று என்று அழைக்கப்படுவது?

Answer: தென்றல் காற்று

20. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்று கூறியவர் யார்?

Answer: இளங்கோவடிகள்

2

21. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: சிலப்பதிகாரம்

22. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலை இயற்றியவர் யார்?

Answer: பலபட்டடைச் சொக்கநாதர்

23. "நந்தமிலும் தன்பொருநை நன்னதியும் சேர் பொறுப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே" தூது செல்ல காற்றை அழைக்கிறாள் என கூறியவர்?

Answer: பலபட்டடைச் சொக்கநாதர்

24. தூது செல்ல காற்றை பெண் ஒருத்து அழைத்ததாக எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

Answer: பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது

25. கி. பி. முதல் நூற்றாண்டில் முசிறித் துறைமுகத்தை விரைவில் அடைய புதிய வழியைக் கண்டு பிடித்தவர் யார்?

Answer: ஹிப்பாலஸ்

26. 'ஹிப்பாலஸ் பருவக்காற்று ' என பெயர் சூட்டியவர்கள் யார்?

Answer: யவனர்கள்

27. "நளிஇரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக" என்ற வரியில் காற்றை சிறப்பித்தவர் யார்?

Answer: வெண்ணிக்குயத்தியார்

28. "நளிஇரு முந்நீர் நாவை ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக" என்ற வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானுறு

29. "நளிஇரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக" என்ற புறநானுறு பாடலில் வெண்ணிக்குயத்தியார் எம்மண்ணை புகழ்ந்து பாடியுள்ளார்?

Answer: கரிகால் பெருவளத்தான்

30. சங்ககால பெண் புலவர் வெண்ணியக்குயத்தியார் 'வளி ' எனக் குறிப்பிட்டு சிறப்பு செய்திருப்பது எதை?

Answer: காற்று

3

31. பருவக்காற்றின் பயனை உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார்?

Answer: கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ்

32. தென்மேற்கு பருவக் காற்றின் காலம் என்ன?

Answer: ஜூன் முதல் செப்டம்பர் வரை

33. வடகிழக்கு பருவ காற்றின் காலம் என்ன?

Answer: அக்டோபர் முதல் டிசம்பர் வரை

34. இந்தியாவின் முதுகெலும்பு?

Answer: வேளாண்மை

35. இந்தியாவிற்குத் தேவையான 70% மழையை எந்தக் காற்று தருகிறது?

Answer: தென்மேற்கு பருவக் காற்று

36. காற்று எந்தப்பருவ கால காற்றில் புயலாகமாறுகிறது?

Answer: வடகிழக்கு பருவக்காற்று

37. "வளி மிகின் வலி இல்லை" என்று கூறியவர் யார்?

Answer: ஐயூர் முடவனார்

38. "கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது" என்று கூறியவர் யார்?

Answer: மதுரை இளநாகனார்

39. புவியில் உயிர்ச் சங்கிலித்தொடர் அறுபடாதிருக்க உதவுவது?

Answer: காற்று

4

40. உலக காற்றாலை உற்பத்தியில் இந்தியாவின் இடம்?

Answer: 5ம் இடம்

41. இந்திய காற்றாலை உற்பத்தியில் தமிழகத்தின் இடம்?

Answer: முதல் இடம்

42. உலகிலேயே அதிகளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியாவின் பங்கு?

Answer: 2ம் இடம்

43. உயிர்வளியை உடையது எது?

Answer: அக்சிஜன்

44. tyres என்பது?

Answer: மெது உருளைகள்

45. காற்று மாசுபடுவதால் என்ன நோய் ஏற்படுகிறது?

Answer: கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய் இளைப்பு நோய்

46. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது எது?

Answer: காற்று மாசுபாடு

47. காற்று மாசுபடுவதல் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக எந்த நிறுவனம் கூறுகிறது?

Answer: ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF)

48. கதிரவனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் அரணாக விளங்குவது எது?

Answer: ஓசோன் படலம்

49. குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்று எது?

Answer: குளோரோ புளோரா கார்பன்

50. எந்த வாயு ஓசோன் படலத்தை ஓட்டையிடுகிறது?

Answer: குளோரோ புளோரோ கார்பன்

51. ஓசோன் வாயு பாதிப்பால் ஏற்படும் தீமைகள்?

Answer: ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ள அனைத்து உயிர்களும் துன்பம் அடைகின்றன. கண்களும் தோலும் பாதிப்படைகின்றன

5

52. தற்போது குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு எது?

Answer: ஹைட்ரோ கார்பன் (HC)

53. அமிலமழை பொழிவால் ஏற்படும் தீமைகள்?

Answer: மண், நீர், கட்டங்கள், நீர்வாழ் உயிரினங்கள் ஆகியவை துன்பத்துக்குள்ளாகின்றன

54. உலக காற்று தினம் கொண்டாடப்படும் நாள்?

Answer: ஜூன் 15 - ஆம் நாள்

55. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு ----- ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்?

Answer: ஒரு இலட்சம்

56. பின் வருத்தங்கள் என்ற தலைப்பில் காற்றை பாடாமல் விட்டதற்கு வருந்தும் கவிஞர் யார்?

Answer: தேவகோட்டை வா. மூர்த்தி

57. "மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம் வருடி" என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer: தேவகோட்டை வா. மூர்த்தி

58. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் பாடல்கள் யாவை?

Answer: திருவெம்பாவை, திருப்பாவை (அவர்கள் தாய்மொழியில் எழுதிவைத்து பாடுகின்றனர்)

59. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடப்படுகின்றன என கூறியவர்?

Answer: தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம்)

60. எந்த நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்கு கற்களால் தாஜ்மகால் கட்டப்பட்டது?

Answer: 17 - ம் நூற்றாண்டு

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்