10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிரின்-ஓசை - தொகை-நிலைத்-தொடர்கள்

  Play Audio

1. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது?

Answer: சொற்றோடர் அல்லது தொடர் எனப்படும்

2. பெயர்ச்சொல்லோடு வினைச் சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உறுபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அது?

Answer: தொகை நிலைத்தொடர் ஆகும்

3. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

Answer: 6 வகைப்படும்

4. 6வகையான தொடர்நிலைத்தொடர்கள் யாவை?

Answer: வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை

5. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது?

Answer: உறுப்பும் பயனும் உடன் தொக்க தொகை

6. உடன் தொக்க தொகை எடுத்துக்காட்டு தருக?

Answer: தேர் பாகன் (தேரை ஓட்டும் பாகன்)

7. காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியை தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது ----- எனப்படும்?

Answer: வினைத்தொகை

1

8. காலம் கரந்த பெயரெச்சமே?

Answer: வினைத்தொகை

9. வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: வீசுதென்றல், கொல்களிறு

10. நிறம், வடிவம், சுவை, அளவு, முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயர்களும், அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை "என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்புப் உருபுகளும் மறைந்து வருவது ----- எனப்படும்?

Answer: பண்புத்தொகை

11. பண்புடத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: செங்காந்தள், வட்டத்தொட்டி, இன்மொழி

12. சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் "ஆகிய" என்னும் பண்பு உருபு தொக்கி வருவது?

Answer: இருபெயரொட்டுப் பண்புத்தொகை

13. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு உதாரணம் தருக்க?

Answer: சாரைப்பாம்பு, மார்கழித் திங்கள்

14. உவமைக்கு பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது?

Answer: உவமைத்தொகை எனப்படும்

15. உவமைத்தொகை எடுத்துக்காட்டு தருக?

Answer: மலர்க்கை (மலர் போன்ற கை)

16. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறந்து வருவது?

Answer: உம்மைத்தொகை

2

17. எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வருவது?

Answer: உம்மைத்தொகை

18. உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: அண்ணன் தம்பி, தாய்சேய்

19. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலை தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது?

Answer: அன்மொழித் தொகை எனப்படும்

20. அன்மொழித் தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: சிவப்புச் சட்டை பேசினார், முறுக்கு மீசை வந்தார்

21. "உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம் " - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

Answer: மோனை, எதுகை

22. "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி " - என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

Answer: கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

3

23. பெரிய மீசை சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

Answer: அன்மொழித்தொகை

24. கொண்டல் என்பது எதைக் குறிக்கிறது?

Answer: கிழக்கு

25. கோடை என்பது எதைக் குறிக்கிறது?

Answer: மேற்கு

26. வாடை என்பது எதைக் குறிக்கிறது?

Answer: வடக்கு

27. தென்றல் என்பது எதைக் குறிக்கிறது?

Answer: தெற்கு

28. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

Answer: கண்ணதாசன்

29. அந்த இடம் காற்றே வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது என்று எழுதியவர் யார்?

Answer: அப்துல் ரகுமான்

30. கண்ணிற்கு காட்சி தராமல் இருக்கும் மலர்கள்?

Answer: ஆல மலர், பலா மலர்

31. அறிய இயலாத மலர்கள் யாவை?

Answer: கள்ளி மலர், பாங்கர் மலர்ந்த

32. புறத்தே காட்சி படாமல் உள்ளேயே இருக்கும் மலர்கள்?

Answer: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா

33. மக்கள் விரும்பாத மலர்கள்?

Answer: நெருஞ்சி. எருக்கு, பூனை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை

4

34. இனிப்பான பூ எது?

Answer: இலுப்பை

35. இலுப்பை பூவை விரும்பி உண்ணும் விலங்கு எது?

Answer: கரடி

36. குடிநீருக்காக தன் மணத்தை ஏற்றும் பூ எது?

Answer: பாதிரிப் பூ

37. எந்தப் பூவில் காய்தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும்?

Answer: மூங்கில் பூ

38. பூக்களைப் பற்றிய அரிய இலக்கிய செய்தி என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: இளஞ்சேரன்

39. storm ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: புயல்

40. tornado ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: சூறாவளி

41. land breeze ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: நிலைக்கற்று

42. tempest ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: பெருங்காற்று

43. sea breeze ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: கடல்காற்று

44. whirlwind ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: சூழல் காற்று

45. குயில் பாட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: பாரதியார்

46. அதோ அந்த பறவை போல் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ச. முகமது அலி

47. உலகின் மிகச் சிறிய தவளை என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: எஸ். ராமகிருஷ்ணன்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்