10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-நாடு-சமூகம் - இயல் ஏழு - விதைநெல் - சிற்றகல்-ஒளி

  Play Audio

1. மேற்கத்தியர் மேற்கொண்ட கடல்வழிக் குதிரை வணிகம், 17 - ம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படும் இடம்?

Answer: திருப்புடைமருதூர்

2. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறப்பான ஆண்டு எது?

Answer: 1906 ம் ஆண்டு

3. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போரை தென் ஆப்ரிக்காவில் தொடங்கிய ஆண்டு என்ன?

Answer: 1906 - ம் ஆண்டு

4. வ. உ. சி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுத்தசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு?

Answer: 1906

5. ம. பொ. சி எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?

Answer: ஜுன் 26, 1906, சென்னை ஆயிரம் விளக்கு, சால்வன்குப்பம்

6. ம. பொ. சி யின் பெற்றோர் யாவர்?

Answer: பொன்னுச்சாமி, சிவகாமி

7. ம. பொ. சி க்கு பெற்றோர் வைத்த பெயர் என்ன?

Answer: ஞானப்பிரகாசம்

8. ம. பொ. சி யை 'சிவஞானி 'என்று அழைத்தவர் யார்?

Answer: சரப்பையர் என்ற முதியவர்

9. ம. பொ. சி யின் கல்வி எந்த வகுப்புடன் முடிவுபெற்றது?

Answer: மூன்றாம் வகுப்பு

10. ம. பொ. சி என அழைக்கப்படுபவர் யார்?

Answer: ம. பொ. சிவஞானம்

1

11. ம. பொ. சி யின் தாயார் எந்த பாடலை பாடினார்?

Answer: அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை

12. ம. பொ. சி யாருடைய பாடல்களை விரும்பி பாடினார்?

Answer: சித்தர் பாடல்கள்

13. ஒருவன் அறிவு விளக்கம் பெற உள்ள இரண்டு வழிகள் யாது?

Answer: கல்வி, கேள்வி

14. ம. பொ. சி யின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை யாருக்கு மிகுந்த பங்கு உண்டு?

Answer: திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடியார்கள்

15. ம. பொ சி தன் வாழ்நாளில் தான் சேர்த்து வைத்த சொத்தாக எதைக் குறிப்பிடுகிறார்?

Answer: தான் சேர்த்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை

16. பேராயக் கட்சி என்ற கட்சி எது?

Answer: காங்கிரஸ் கட்சி

17. காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு எது?

Answer: 1931ம் ஆண்டு

18. ம. பொ. சி எந்த கட்சி ஊர்வலங்களில் கலந்துகொண்டார்?

Answer: காங்கிரஸ் கட்சி

19. 30. 9. 1932 இல் 'தமிழா துள்ளி எழு ' என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடம் மக்களிடம் வழங்கியதாகாக சிறையில் அடைக்கப்பட்டவர்?

Answer: ம. பொ. சி

20. பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் கூறி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தவர் யார்?

Answer: ம. பொ. சி

2

21. ம. பொ. சி க்கு எத்தனை மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது?

Answer: மாத சிறை தண்டனை, 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது (வறுமையால் பணம் கட்டத்தவறியதால் மேலும் 3 மாதம்)

22. ம. பொ. சி க்கு சிறையில் எந்த வகுப்பு உணவு கிடைத்தது?

Answer: சி. வகுப்பு உணவு

23. 'இந்தியாவை விட்டு வெளியேறு ' என்ற தீர்மானத்தை பம்பையில் காங்கிரஸ் கட்சி எந்த ஆண்டு நிறைவேற்றியது?

Answer: ஆகஸ்ட் 8, 1942ஆம் ஆண்டு

24. ம. பொ. சி மீண்டும் எந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்?

Answer: ஆகஸ்ட் 13, 1942 ஆம் ஆண்டு, வேலூர் சிறை

25. ம. பொ. சி வேலூர் சிறையில் கண்ட தென்னகத் தலைவர் யாவர்?

Answer: காமராஜர், தீரர் சத்யமூர்த்தி, பிரகாசம்

26. ம. பொ. சி வேலூர் சிறையில் இருந்து எந்த சிறைக்கு மாற்றப்பட்டார்?

Answer: அமராவதி சிறை

27. அமராவதி சிறை மேற்கூரை எதனால் வேயப்பட்டிருந்தது?

Answer: துத்தநாகத் தகடு

28. ம. பொ. சி. யாருடைய அழைப்பை ஏற்று வடகொள்ளைக்குச் சென்றார்?

Answer: ஆசிரியர் மங்கலக்கிழார் 55 வயது பெரியவர் அழைப்பை ஏற்று

29. ஆந்திரத் தலைவர்கள் எந்த பகுதியை ஆந்திராவுடன் இணைக்க விரும்பினார்?

Answer: சித்தூர் மாவட்டம்

30. வடகொள்ளைத் தமிழர்கள் ஒன்றிணைத்து தமிழ் உணர்வு கொள்ள செய்தவர் யார்?

Answer: தமிழாசான் மங்கலங்கிழார்

3

31. வடகொல்லை போராட்டம் எந்த பகுதிகளில் தொடங்கியது?

Answer: சித்தூர். புத்தூர், திருத்தணி

32. யாருடன் இணைத்து 'தமிழரசு கழகம் ' சென்னை மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் தமிழர் மாநாடு நடைபெற்றது?

Answer: மங்கலங்கிழார்

33. வடகொல்லை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் யாவர்?

Answer: ம. பொ. சி, மங்கலக், விநாயகம், கிழார் ஈ. எஸ். தியாகராஜன், ரஷீத்

34. ராஜமுந்திரி சிறையிலேயே உயிர் துறந்தவர் யார்?

Answer: திருவாலங்காடு கோவிந்தராஜன்

35. பழனி சிறையில் உயிர் துறந்தவர் யார்?

Answer: மாணிக்கம்

36. மொழிவாரி வாரியம் யார் தலைமையில் அமைக்கப்பட்டது?

Answer: சர்தார். கே. எம். பணிக்கர்

37. மொழி வாரி வாரியம் மூலம் சித்தூர் எதனுடன் இணைக்கப்பட்டது?

Answer: ஆந்திர மாநிலம்

38. 'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'என்று முழங்கியவர்கள்?

Answer: ம. பொ. சி

39. ம. பொ. சி க்கு தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது?

Answer: சிலப்பதிகாரம்

40. இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொது சொத்து என கூறியவர்?

Answer: ம. பொ. சி

4

41. பட்டி தொட்டியங்கும் எந்த மாநாடு நடைபெற்றது?

Answer: சிலப்பதிகார மாநாடு

42. திருத்தணி வரை உள்ள பகுதிகளில் தமிழகத்திற்கு சொந்தம் என கூறிய ஆணையம்?

Answer: படாஸ்கர் ஆணையம்

43. ஆந்திர மாநிலம் பிரியும்போது அத தலைநகராக எந்த நகரம் இருக்க வேண்டும் என்று ஆந்திர தலைவர்கள் விரும்பினார்?

Answer: சென்னை

44. தலைநகரை காக்க தன் முதலமைச்சர் பதவியை துறக்கவும் முன்வந்தவர் யார்?

Answer: ராஜாஜி

45. எந்த நீதிபதி தலைமையில் ஆனா ஒரு நபர் ஆணையம் ஆந்திரவிற்கு சென்னை தலைநகர் என்று பரிந்துரை செய்தது?

Answer: நீதிபதி வாஞ்சு

46. தலைநகரை மீட்க மாநகராட்சியின்சிறப்பு கூட்டத்தை நடத்தியவர்?

Answer: மாநகரத் தந்தை செங்கல்வராயன்

47. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கியவர் யார்?

Answer: ம. பொ. சி

48. பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் சென்னை தமிழருக்கே என்று அறிவித்த நாள் எது?

Answer: 25. 03. 1953

49. தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சினைக் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தவர் யார்?

Answer: தமிழரசுக் கழகம்

50. தெற்கொள்ளை போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன?

Answer: 1953 - 1954

5

51. எல்லை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முதன்மையானவர்களில் யாவர்?

Answer: பி. எஸ். மணி, ம. சங்கரலிங்கம்

52. தெற்க்கெல்லை போராட்டத்தின் பொது துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழரசுக் கழக தோழர்கள் யார்?

Answer: நேசமணி

53. தென் திருவிதாங்கூரில் செல்வாக்கு படைத்தவர் யார்?

Answer: நேசமணி

54. இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர், வழக்கறிஞர், நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும்இருந்தவர் யார்?

Answer: நேசமணி

55. குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர் யார்?

Answer: நேசமணி

56. மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer: ஏ. நேசமணி

57. எந்த ஆண்டு கன்னியாகுமாரி மாவட்டம் தமிழ்நாட்டின் இணைத்து?

Answer: நவம்பர்1, 1956ஆண்டு

58. நேசமணி நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சிலையோடு மணிமண்டபம் எங்கு அமைந்தது?

Answer: நாகர்கோவில்

59. திருவிதாங்கோர் ஆட்சி அகன்று எந்த மாநிலம் உருவானது?

Answer: கேரளா மாநிலம்

60. தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரிக்க அமைக்கப்பட்ட ஆணையம்?

Answer: பசல் அலி ஆணையம்

6

61. தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரித்து பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான ஆண்டு?

Answer: 1955 அக்டோபர் - 10

62. சென்னை மாநிலத்தில் உள்ள எந்த பகுதி கேரளாவுடன் இணைந்து?

Answer: மலபார் மாவட்டம்

63. திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் இருந்த எந்த பகுதி தமிழகத்துடன் இணைந்தது?

Answer: கல்குளம், விளவங்கோடு, தோவானை, அசத்தீசுவரம், செங்கோட்டை

64. நம்மை விட்டு போன தமிழக பகுதிகள் யாவை?

Answer: தேவிக்குளம், பீர்மேடு

65. தமிழகத்தின் வடகோல்லை என புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது?

Answer: வேங்கட மலை

66. தமிழகத்தில் தெற்கொல்லை எது என புறநானூறு சிலப்பதிகாரம் கூறுகிறது?

Answer: குமரி முனை

67. எந்த அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அறிய கையெழுத்து சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது?

Answer: ஆஸ்திரிய நாட்டு தலைநகரில் உள்ள அருங்காட்சியகத்தில்

68. தமிழக வணிகருக்கும், கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?

Answer: ஆஸ்திரேலியா நாட்டு தலைநகரில் உள்ளது அருங்காட்சியகத்தில்

69. ஆஸ்திரிய நாட்டு தலைநகர்?

Answer: வியன்னா

70. எனது போராட்டம் என்னும் தன்வரலாற்று நூலை எழதியவர் யார்?

Answer: ம. பொ. சி

7

71. சிலம்புச்செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?

Answer: ம. பொ. சி

72. ம. பொ. சியின் காலம் என்ன?

Answer: 1906 - 1995

73. தமிழிலரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?

Answer: ம. பொ. சி

74. ம. பொ. சி சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த காலம் என்ன?

Answer: 1952 - 1954 வரை

75. ம. பொ. சி சட்டமன்ற மேலவை தலைவராக இருந்த காலம் என்ன?

Answer: 1972 முதல் 1978 வரை

76. ம. பொ. சி 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ' என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி விருது வழங்கிய ஆண்டு?

Answer: 1966

77. தமிழக அரசு ம. பொ. சிக்கு சிலைவைத்த இடங்கள் யாவை?

Answer: சென்னை தியாகராய நகரிலும், திருத்தணியிலும்

8

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்