10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-நாடு-சமூகம் - இயல் ஏழு - விதைநெல் - மங்கையராய்ப்-பிறப்பதற்கே

  Play Audio

1. ஐ. நா அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையை பாடியவர் யார்?

Answer: எம். எஸ். சுப்புலட்சுமி

2. 'காற்றினிலே வரும் கீதமாய்' மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் யார்?

Answer: எம். எஸ். சுப்புலட்சுமி

3. இசைப்பேரரசி என்று நேருவால் புகழப்பட்டவர் யார்?

Answer: எம். எஸ். சுப்புலட்சுமி

4. எம். எஸ். சுப்புலட்சுமியின் குரு யார்?

Answer: அவருடைய தாய்

5. எம். எஸ். சுப்புலட்சுமி எந்த வயதில் பாடல்களை பதிவு செய்தார்?

Answer: 10 வயதில்

6. எம். எஸ். சுப்புலட்சுமியின் பெயரின் விரிவாக்கம்?

Answer: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

7. எம். எஸ். சுப்புலட்சுமி எதுவரை படித்துள்ளார்?

Answer: 5ம் வகுப்பு

8. எம். எஸ். சுப்புலட்சுமி தன் 17 - வது வயதில் எங்கு கச்சேரி நடத்தினார்?

Answer: சென்னை மியூசிக் அகாடமி

9. எம். எஸ். சுப்புலட்சுமிக்கு எந்த திரைப்படம் வெற்றியைத் தந்தது?

Answer: மீரா திரைப்படம்

10. எம். எஸ். சுப்புலட்சுமியின் கடைசி திரைப்படம் எது?

Answer: மீரா

1

11. எம். எஸ். சுப்புலட்சுமியின் எந்த பாடலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது?

Answer: காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன்

12. எம். எஸ். சுப்புலட்சுமியை பாராட்டியவர்கள் யார்?

Answer: நேரு, சரோஜினி நாயுடு

13. காந்தியடிகள் முன்பு எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய பாடல் எது?

Answer: இரகுபதி இராகவ இராஜாராம்

14. காந்தியடிகள் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் எந்த பாடலை பாடுமாறு கேட்டுக்கோண்டார்?

Answer: மீரா எழுதிய பாடல்கள்

15. காந்தியடிகள் கேட்டு எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய 'ஹரி தும் தும் ஹரோ ' என்ற மீரா பஜன் பாடல் எந்த ஆண்டு சென்னை வானொலி நிலையம் ஒளிபரப்பியது?

Answer: 1947 ஆம் ஆண்டுகாந்தியடிகள் பிறந்த நாள் அன்று

16. எம். எஸ். சுப்புலட்சுமி இங்கிலாந்தில் பாடிய ஆண்டு எது?

Answer: 1963

17. எம். எஸ். சுப்புலட்சுமி ஐ. நா அவையில் பாடிய ஆண்டு என்ன?

Answer: 1966

18. எம். எஸ். சுப்புலட்சுமி 1954 ஆண்டு தாமரையணி விருது பெற்றபோது அவரை தொட்டுத் தடவி பாராட்டியவர்?

Answer: ஹெலன் கெல்லர்

19. எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலில் பதிவு செய்யபட்ட வெங்கடேச சுப்ரபாதம் எங்கு ஒலிக்கத் தொடங்கியது?

Answer: திருப்பதியில், 1966 ஆண்டு

20. எம். எஸ். சுப்புலட்சுமிக்கு நோபல் பரிசுக்கு இணையான 'மகசேசே விருது' வழங்கிய ஆண்டு?

Answer: 1974

2

21. மகசேசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?

Answer: எம். எஸ். சுப்புலட்சுமி

22. எம். எஸ். சுப்புலட்சுமி எந்த மொழிகளில் பாடியுள்ளார்?

Answer: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம்

23. எம். எஸ். சுப்புலட்சுமியின் இந்திய அரசு என்ன விருது வழங்கி கெளரவித்தது?

Answer: இந்திய மாமணி விருது

24. "குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா" - என்று பாடியவர் யார்?

Answer: எம். எஸ். சுப்புலட்சுமி

25. பொதுவெளியில் நடனம் ஆடுவது குற்றம் என்ற காலத்தில் தன் நடன வாழவைத் தொடங்கிவர் யார்?

Answer: பாலசரசுவதி

26. இந்திய அரசின் எந்த விருதை பாலசரசுவதி பெற்றுள்ளவர்?

Answer: தாமரை செவ்வணி விருது

27. பாலசரசுவதி ஏழு வயதாக இருக்கும் போது முதன் முதலில் நடன அரங்கேற்றம் நிகழ்த்திய இடம் எது?

Answer: காஞ்சிபுரம்

28. பாலசரசுவதி தன் 15 ஆம் வயதில் நடன அரங்கேற்றம் நிகழ்த்திய இடம் எது?

Answer: சென்னை, சங்கீத சமாஜம்

29. நம் நாட்டுப்பண்ணுக்கு நடனமாடியவர் யார்?

Answer: பாலசரசுவதி, சென்னை

30. யார் பாலசரசுவதி நாட்டியதைக் கண்டு மிகவும் பாராட்டினார்?

Answer: பண்டிட் இரவிசங்கர்

3

31. டோக்கியோவில் எந்த நிகழ்வின் பொது பாலசரசுவதி நடனம் ஆடினார்?

Answer: கிழக்கு மேற்குச் சந்திப்பு

32. தமிழில் எழுதிய பெண்களில் முதன் முதலில் களத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டி கதை எழுதியவர் யார்?

Answer: ராஜம் கிருஷ்ணன்

33. வேருக்கு நீர் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

Answer: ராஜம் கிருஷ்ணன்

34. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?

Answer: ராஜம் கிருஷ்ணன்

35. 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி ' என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் யார்?

Answer: ராஜம் கிருஷ்ணன்

36. தூத்துக்குடியில் பல மாதங்கள் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" என்ற புதினம் எழுதியவர் யார்?

Answer: ராஜம் கிருஷ்ணன்

37. குறிஞ்சித் தேன்" என்ற புதினத்தில் படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து பதிவு செய்தவர் யார்?

Answer: ராஜம் கிருஷ்ணன்

38. "அலையாய்க் கறையில்" என்ற புதினத்தில் கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பற்றி பதிவு செய்தவர் யார்?

Answer: ராஜம் கிருஷ்ணன்

39. "சேற்றில் மனிதர்கள்", "வேருக்கு நீர்" என்ற புதினத்தில் அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை சுட்டிக்காட்டியவர் யார்?

Answer: ராஜம் கிருஷ்ணன்

40. ராஜம் கிருஷ்ணன் எழுதிய எழுத்துலக தளங்கள் யாவை?

Answer: புதினங்கள், கட்டுரை, சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல், குழந்தை இலக்கியம், வரலாற்று நூல்

4

41. குழைந்தைகளை தீப்பெட்டித் தொழிலில் முடக்கி, தீக்குச்சிகளை அந்தப் பெட்டியில் அடைப்பதை போன்று, குழந்தைகளின் உடலையும் மனதையும் நொறுக்கும் அவல உலகைக் கூறும் "கூட்டுக் குஞ்சுகள்" என்ற புதினத்தை படைத்தவர்?

Answer: ராஜம் கிருஷ்ணன்

42. பெண்குழைந்தைகளுக்கான கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல் எது?

Answer: மண்ணகத்துப் பூந்துளிகள்

43. சமூக அவலங்களை தன் புதினத்தில் எழுதியவர் யார்?

Answer: ராஜம் கிருஷ்ணன்

44. மதுரையின் முதல் பட்டதாரிப் பெண் யார்?

Answer: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

45. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பெற்ற விருதுகள் யாவை?

Answer: இந்திய அரசு - தாமரைத் திரு விருது, சுவீடன் அரசு - வாழ்வுரிமை விருது, சுவிட்சர்லாந்து அரசு - காந்தி அமைதி விருது

46. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் கல்லூரிப் பருவத்தில் யார் சிந்தனையால் ஈர்க்கப்பட்டார்?

Answer: காந்திய சிந்தனை

47. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் எதில் களப்பணி ஆற்றினார்?

Answer: சர்வோதய இயக்கம்

48. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் எந்த போராட்டங்களில் பங்கு கொண்டார்?

Answer: ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு, சட்ட மறுப்பு இயக்கம்

49. நாட்டின் விடுதலைக்குப்பின் கணவருடன் இணைந்து "பூதான "இயக்கத்தில் பணிபுரிந்தார்?

Answer: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

50. "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர செய்தவர்?

Answer: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

5

51. "உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள், உங்களால் எதையும் சாதிக்க இயலும்"என கூறியவர் யார்?

Answer: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

52. காந்தியடிகளுடன், வினோபாவேயுடனும் பணியாற்றியவர் யார்?

Answer: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

53. பள்ளி பருவத்தில் படிக்க இயலாவிட்டாலும் பட்டறிவால் கற்றுக்கொண்டவர் யார்?

Answer: சின்னப்பிள்ளை

54. களஞ்சியம் என்ற குழுவை ஆரம்பித்தவர் யார்?

Answer: சின்னப்பிள்ளை

55. நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தவர்கள் யாவர்?

Answer: சின்னப்பிள்ளை மற்றும் பெண்கள் குழு

56. சின்னப்பிள்ளைக்கு மீன் பிடிக்கும் குத்தகையை யார் கொடுத்தார்?

Answer: மதுரை ஆட்சியர்

57. சின்னப்பிள்ளை பெட்ரா விருதுகள் யாவை?

Answer: ஸ்திரீ சக்தி புரஸ்கர் விருது - வாஜ்பாய் கைகளில், ஒளவை விருது - தமிழக அரசு, பொதிகை விருது - தூர்தர்சன், இந்திய அரசு - தாமரைத் திரு விருது

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்