1. தேம்பாவணியை இயற்றியது யார்?
Answer: வீரமாமுனிவர்
2. "உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: வீரமாமுனிவர்
3. கிறித்துவிற்குமுன் தோன்றியவர் யார்?
Answer: திருமுழுக்கு யோவான்
4. கிறித்துவின் வருகையை அறிவித்தவர் யார்?
Answer: திருமுழுக்கு யோவான்
5. திருமுழுக்கு யோவானை எவ்வாறு அழைப்பர்?
Answer: அருளப்பன்
6. வீரமாமுனிவர் திருமுழுக்கு யோவானை தன் காப்பியத்தில் என்ன பெயரில் குறிப்பிடுகிறார்?
Answer: கருணையன்
7. கருணையன் தாயாரின் பெயர் என்ன?
Answer: எலிசபெத் அம்மையார்
8. கருணையன் யார் இறப்பால் துன்பம் அடைகிறார்?
Answer: தன் தாயார் எலிசபெத் இறந்து விட்டதால்
9. கருணையன் துன்பத்தில் பங்கு கொண்டது யார்?
Answer: இயற்கை
10. சேக்கை என்பதன் பொருள் என்ன?
Answer: படுக்கை
1
11. யாக்கை என்பதன் பொருள் என்ன?
Answer: உடல்
12. பிணித்து என்பதன் பொருள் என்ன?
Answer: கட்டி
13. வாய்ந்த என்பதன் பொருள் என்ன?
Answer: பயனுள்ள
14. இளங்கூழ் என்பதன் பொருள் என்ன?
Answer: இளம்பயிர்
15. காய்ந்தேன் என்பதன் பொருள் என்ன?
Answer: வருந்தினேன்
16. அசும்பு என்பதன் பொருள் என்ன?
Answer: நிலம்
17. தேம்ப என்பதன் பொருள் என்ன?
Answer: வாட
18. புழை என்பதன் பொருள் என்ன?
Answer: துளை
19. உய்முறை என்பதன் பொருள் என்ன?
Answer: வாழும் வழி
20. ஓர்ந்து என்பதன் பொருள் என்ன?
Answer: நினைத்து
2
21. துணர் என்பதன் பொருள் என்ன?
Answer: மலர்கள்
22. படலை என்பதன் பொருள் என்ன?
Answer: மாலை
23. உவமணி என்பதன் பொருள் என்ன?
Answer: மணமலர்
24. கருணையன் யார் மார்பில் மாலையென அசைந்து வாழ்ந்தார்?
Answer: தன் தாயின் மார்பில்
25. கருணையன் புலம்பியதை கேட்டு யார் அழுதனர்?
Answer: மலர்கள், பறவைகள், வண்டுகள்
26. வீரமாமுனிவர் யாரை சந்திப்பதற்காக உருது மொழி கற்றார்?
Answer: திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னருடன் உரையாட
27. வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது மொழியைக் கற்றார்?
Answer: 2 மாதங்களில்
28. வீரமமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கிய பட்டம் என்ன?
Answer: இஸ்மத் சன்னியாசி
29. இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீக சொல்லுக்கு பொருள் என்ன?
Answer: தூய துறவி
30. தேம்பா + அணி என்பதன் பொருள் என்ன?
Answer: வாடாத மாலை
3
31. தேன் + பா + அணி என்பதன் பொருள் என்ன?
Answer: தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு
32. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர் யார்?
Answer: கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்
33. தேம்பாவணி எத்தனை காண்டங்கள் உடையது?
Answer: 3 காண்டங்கள்
34. தேம்பாவணியில் உள்ள படலங்களின் எண்ணிக்கை?
Answer: 36 படலங்கள்
35. தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?
Answer: 3615 பாடல்கள்
36. தேம்பாவணி இயற்றப்பட்ட காலம் என்ன?
Answer: 17ம் நூற்றாண்டு
37. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
Answer: கான்சுடான்சு சோசப் பெசுகி
38. தமிழின் முதல் அகராதி எது?
Answer: சதுரகராதி
39. தமிழின் முதல் சதுரகராதியை எழுதியவர் யார்?
Answer: வீரமாமுனிவர்
40. தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்) என்ற என்ற எழுதியவர் யார்?
Answer: வீரமாமுனிவர்
4
41. பரமார்த்த குரு கதைகளை இயற்றியவர் யார்?
Answer: வீரமாமுனிவர்
42. காக்கென்று என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
43. கணீர் என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: கண்ணீர் என்பதன் இடைக்குறை
44. காய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: வினைத்தொகை
45. உய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: வினைத்தொகை
46. செய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: வினைத்தொகை
47. மெய்முறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: வேற்றுமைத்தொகை
48. கைமுறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
5