1. "உவமையானது வினை, பயன், வடிவம், உரு என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும்" என்று கூறியவர் யார்?
Answer: தொல்காப்பியர்
2. "வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்" என்று கூறும் நூல்?
Answer: தொல்காப்பியம்
3. புலிபோல பாய்ந்தான் -
Answer: வினை (தொழில்)
4. மழைபோல கொடுக்கும் கை -
Answer: பயன்
5. துடி போலும் இடை -
Answer: வடிவம் (மெய்)
6. தளிர்போலும் மேனி -
Answer: உரு (நிறம்)
7. சங்கப்பாடலில் பெரும்பாலும் எந்த அணி இடம் பெறுகிறது?
Answer: உவமை அணி
8. "அவர்கள் மூளையில் விதையைப்போல் தூவப்பட்ட வேண்டிய அறிவு ஆணையைப்போல் அறையப்படுகின்றது" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை எது?
Answer: வினை உவமை
9. "வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?
Answer: பயன் உவமை
10. "சுருங்கிய குடையை பொல்லாத தோன்றும் அசோகமரம்" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?
Answer: மெய் உவமை (வடிவம்)
1
11. "சோடிய விளக்காய் மாலைநேரத் சூரியனின் மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?
Answer: உரு உவமை (நிறம்)
12. உவமையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது?
Answer: உருவகம்
13. உவமேயம் முன்னும், உவமை பின்னும் வருவது ----- எனப்படும்?
Answer: உருவகம்
14. உவமையின் செறிவார்ந்த வடிவம் ----- ஆகும்?
Answer: உருவகம்
15. தீ போல் சினம் என்பதை சினத்தீ என்றவர் யார்?
Answer: பாரதியார்
16. "சுட்டும் விழிச்சுடர்த்தான் - கண்ணம்மா சூரிய சந்திரரே? என்ற கவிதையை இயற்றியவர் யார்?
Answer: பாரதியார்
17. உருவாக்கத்தில் உள்ள பகுப்புகளின் எண்ணிக்கை?
Answer: 4
18. "எண்ணவலை பின்னும் மூளை சிலந்தி" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?
Answer: வினை உருவகம்
19. "ஆவேசப் புயல்களாகும் அசைக்க முடியாத ஆகாசப்பூ" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?
Answer: பயன் உருவகம்
20. "நீலவயலின் நட்சத்திர மணிகள்" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?
Answer: மெய் உருவகம்
2
21. "மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?
Answer: நிறம் உருவகம்
22. கவிஞர் தான் கூறக்கருத்திய பொருளை வெளிப்படையாக கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை ----- என்பர்?
Answer: உள்ளுறை உவமம் (உவமை)
23. உள்ளுறை உவமம் என்பது?
Answer: தமிழ் இலக்கியதிற்கே உரிய ஒப்பற்ற நெறி
24. வினை, பயன் மற்றும் குறியீடுகளை கொண்டு உருவாக்கப்படுவது எது?
Answer: உள்ளுறை உவமம்
25. இருத்தல் என்றால் ----- எனப் பொருள்படும்?
Answer: தங்குதல்
26. உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்பு பொருள் ----- எனப்படும்?
Answer: இறைச்சி
27. வடமொழியினர் குறிப்பிடுகிற 'தொனிக்கு' இணையானது?
Answer: இறைச்சி
28. இறைச்சி என்பது ----- பாடலில் மட்டுமே இடம்பெறும்?
Answer: அகப்பாடல்
29. "நசைபெரியது உடையர் நல்கலும் நல்குவர்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
Answer: குறுந்தொகை
30. வெளிப்படையாக பொருள் கூறினால் அது?
Answer: உவமை
3
31. உவமைக்குள் மற்றொரு பொருளை குறிப்பாக உணர்த்தினால் அது?
Answer: உள்ளுறை உவமம்
4