6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - இயற்கை-இன்பம் - முதலெழுத்தும்-சார்பெழுத்தும்

  Play Audio

1. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு (முதல் எழுத்து, சார்பு எழுத்து)

2. உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

Answer: 12

3. மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

Answer: 18

4. முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

Answer: 30

5. பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமான எழுத்து எது?

Answer: முதல் எழுத்து

6. முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள் எவை?

Answer: சார்பெழுத்துக்கள்

7. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?

Answer: 10

8. சார்பெழுத்துக்கள்

Answer: 1. உயிர்மெய் 2. ஆய்தம் 3. உயிரளபெடை 4. ஒற்றளபெடை 5. குற்றியலிகரம் 6. குற்றியலுகரம் 7. ஐகாரக்குறுக்கம் 8. ஒளகாரக்குறுக்கம் 9. மகரக்குறுக்கம் 10. ஆய்தக்குறுக்கம்

1

9. மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் தோன்றும் எழுத்து எது?

Answer: உயிர்மெய் எழுத்துகள்

10. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் எவ்வாறு இருக்கும்?

Answer: மெய்யும் உயிரும் சேர்ந்ததாக

11. வரிவடிவம் எதை ஒத்திருக்கும்?

Answer: மெய்யெழுத்தை

12. ஒலிக்கும் கால அளவு எதை ஒத்திருக்கும்?

Answer: உயிர் எழுத்தை

13. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்ற எழுத்து எது?

Answer: ஆய்தம்

14. ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் என்ன?

Answer: முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம்

15. நுட்பமான ஒலிப்பு முறையை உடைய எழுத்து எது?

Answer: ஆய்தம்

16. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?

Answer: ஆய்தம்

17. தனித்து இயங்காத எழுத்து எது?

Answer: ஆய்தம்

18. முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சார்பெழுத்து

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்