1. "தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்?
Answer: தாயுமானவர்
2. தண்டருள் என்ற சொல்லின் பொருள்?
Answer: குளிர்ந்த கருணை
3. பணி என்ற சொல்லின் பொருள்?
Answer: தொண்டு
4. கூர் என்ற சொல்லின் பொருள்?
Answer: மிகுதி
5. எய்தும் என்ற சொல்லின் பொருள்?
Answer: கிடைக்கும்
6. செம்மையருக்கு என்ற சொல்லின் பொருள்?
Answer: சான்றோருக்கு
7. எல்லாரும் என்ற சொல்லின் பொருள்?
Answer: எல்லா மக்களும்
8. ஏவல் என்ற சொல்லின் பொருள்?
Answer: தொண்டு
9. அல்லாமல் என்ற சொல்லின் பொருள்?
Answer: அதைத்தவிர
10. பராபரமே என்ற சொல்லின் பொருள்?
Answer: மேலான பொருளே
1
11. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர் யார்?
Answer: தாயுமானவர்
12. "தமிழ் மொழியின் உபநிடதம்" எனப் போற்றப்படும் நூல்?
Answer: தாயுமானவர் பாடல்கள்
13. ‘கண்ணி’ என்பது?
Answer: இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை
14. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
Answer: தம்முயிர்
15. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
Answer: இன்புற்றிருக்க
16. 'தானென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: தான் + என்று
17. 'சோம்பல்’ என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்?
Answer: சுறுசுறுப்பு
2