7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல் - இயல் ஆறு - கலைவண்ணம் - பேசும்-ஓவியங்கள்

  Play Audio

1. ஆயக்கலைகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?

Answer: 64

2. காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் எந்த கலைக்கு உண்டு?

Answer: ஓவியக்கலை

3. பழங்கால மனிதர்கள் ஓவியங்கள் வரையத் தொடங்கிய இடம் எது?

Answer: குகை

4. குகைகளில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாக இருக்கும்?

Answer: கோட்டோவியங்கள்

5. குகைகளில் காணப்படும் ஓவியங்கள் யாவை?

Answer: வேட்டைக்கு செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்

6. குகைகளில் காணப்படும் ஓவியங்களுக்கு எதைக் கொண்டு வண்ணம் தீட்டினர்?

Answer: மண் மற்றும் கல் துகள்களை கொண்டு

7. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள்?

Answer: அரண்மனைகள், மண்டபவங்கள், கோவில்கள், வீடுகள்

8. சித்தன்னவாசலில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாகும்?

Answer: சுவர் ஓவியங்கள்

9. சுவர் ஓவியங்கள் எதைக் கொண்டு உருவாக்கினார்கள்?

Answer: ஆற்று மணலுடன் சுண்ணாம்பு சேர்த்து சுவரை உருவாக்கி ஈரப்பதம் காய்வதற்கு முன் வரைந்தனர்

10. யார் நினைவாக தஞ்சை பெரிய கோவிலில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன?

Answer: சுந்தரின் நினைவாக

11. ஓவியம் வரையும் துணியை எவ்வாறு அழைத்தனர்?

Answer: எழினி, திரைச்சீலை, கிழி, படாம்

1

12. சீவகசிந்தாமணியில் காப்பியத்தில் யார் யானையைக் கண்டு அஞ்சியக் காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்படுகிறது?

Answer: குணமாலை

13. துணி ஓவியங்கள் தற்போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?

Answer: கலம்காரி ஓவியங்கள்

14. கலம்காரி ஓவியங்கள் தற்போது எம்மாநிலங்களில் வரையப்படுகிறது?

Answer: தமிழகம், ஆந்திரா

15. "புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?

Answer: நெடுநல்வாடை

16. "புனையா ஓவியம் புறம் போந்தன்ன "என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?

Answer: மணிமேகலை

17. ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு ----- மற்றும் ----- ஓவியமாக வரைவார்கள்?

Answer: கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சி ஓவியமாகவும்

18. தற்போது எந்த வகை ஓவியங்கள் காண்பது அரிதாகிவிட்டது?

Answer: ஓலைச்சுவடி ஓவியங்கள்

19. ஓலைச்சுவடி ஓவியங்கள் காணப்படும் காட்சிகள் யாவை?

Answer: இதிகாசம் மற்றும் புராணக்கதை காட்சிகள்

20. ஓலைச்சுவடி ஓவியங்கள் எங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன?

Answer: தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்

21. முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும், அரசு ஆவணங்களையும் எதில் பொறிப்பது வழக்கம்?

Answer: செப்பேடு

22. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்த இடம்பெற்றுள்ள நூல்?

Answer: பரிபாடல்

2

23. "இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: பரிபாடல்

24. தந்த ஓவியங்கள் எங்கு அதிகமாக காணப்படுகிறது?

Answer: கேரளா

25. கண்ணாடி ஓவியக் கலைஞர்கள் எங்கு அதிகமாக காணப்படுகின்றனர்?

Answer: தஞ்சாவூர்

26. தற்காலத்தில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் எது?

Answer: தாள் ஓவியங்கள்

27. அரசியல் கருத்துகளை எளிமையாக விளங்குவதற்கு பயன்படும் ஓவியம் எது?

Answer: கருத்துப்பட ஓவியம்

28. எந்த இதழில் பாரதியார் கருத்துப்பட ஓவியங்களை வரைந்தார்?

Answer: இந்தியா இதழில்

29. கருத்துப்பட ஓவியங்களின் மறுவடிவம் என்ன?

Answer: கேலிச்சித்திரம்

30. ஓவியத்தின் வேறுபெயர் என்ன?

Answer: ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி

31. ஓவியம் வரைபவர்களின் வேறுபெயர் என்ன?

Answer: கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்

32. ஓவியக் கூடத்தின் வேறுபெயர்கள் என்ன?

Answer: எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை

33. ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?

Answer: இராஜா இரவிவர்மா

3

34. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையில் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் யார்?

Answer: கொண்டையராஜி

35. நாட்காட்டி ஓவியங்களை ----- என்றும் அழைப்பர்?

Answer: பசார் பெயிண்டிங்

36. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று?

Answer: மண்துகள்

37. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்?

Answer: கேலிச்சித்திரம்

38. 'கோட்டோவியம் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: கோடு + ஓவியம்

39. 'செப்பேடு 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: செப்பு + ஏடு

40. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: எழுத்தாணி

41. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?

Answer: பாரதியார்

42. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது?

Answer: துணி ஓவியம்

43. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ----- மீது பொறித்துப் பாதுகாத்தனர்?

Answer: செப்பேடுகள்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்