1. கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே ----- ஆகும்?
Answer: கலங்கரை விளக்கம்
2. "வானம் ஊன்றி மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
3. மதலை என்பதன் பொருள்?
Answer: தூண்
4. ஞெகிழி என்பதன் பொருள்?
Answer: தீச்சுடர்
5. அழுவம் என்பதன் பொருள்?
Answer: கடல்
6. வேயா மாடம் என்பதன் பொருள்?
Answer: வைக்கோல் போன்றவற்றால் வேயப்பட்ட திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
7. சென்னி என்பதன் பொருள்?
Answer: உச்சி
8. உரவுநீர் என்பதன் பொருள்?
Answer: பெருநீர்ப் பரப்பு
9. கரையும் என்பதன் பொருள்?
Answer: அழைக்கும்
10. கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் யார்?
Answer: உருதிரங்க கண்ணனார்
11. பரும்பாணாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: உருத்திரங் கண்ணனார்
1
12. பட்டினப்பாலை என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: உருத்திரங் கண்ணனார்
13. பெரும்பாணாற்றுப் படையில் தலைவன் யார்?
Answer: தொண்டைமான் இளந்திரையன்
14. வள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது?
Answer: ஆற்றுப்படை இலக்கியம்
15. பத்துப்பாட்டு நூல்கள்?
Answer: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
16. வேயாமாடம் எனப்படுவது?
Answer: சாந்தினால் பூசப்படுவது
17. உரவுநீர் - அழுவம் - - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்?
Answer: கடல்
18. கடலில் துறை கலங்குவன?
Answer: மரக்கலங்கள்
19. தூண் என்னும் பொருள் தரும் சொல்?
Answer: மதலை
2