7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - அறிவியல்-ஆக்கம் - தமிழரின்-கப்பற்கலை

  Play Audio

1. பயணம் எத்தனை வகைப்படும்?

Answer: மூன்று வகை (தரைவழி, நீர்வழி, வான்வழி)

2. நீர்வழிப் பயணம் எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு வகை (உள்நாட்டு நீர்வழி, கடல்நீர் பயணம்)

3. நமக்கு கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையான நூல் எது?

Answer: தொல்காப்பியம்

4. கடற்பயணத்தை 'முந்நீர் வழக்கம் 'எனக் குறிப்பிடப்படும் நூல் எது?

Answer: தொல்காப்பியம்

5. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து " - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

Answer: திருக்குறள்

6. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டததை விரிவாக விளக்கும் நூல் எது?

Answer: பட்டினப்பாலை

7. 'உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் 'என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?

Answer: அகநானுறு

8. "அருங்கலம் தரீஇயற் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: பதிற்றுப்பத்து

9. பல வகையான கப்பல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிகண்டு எது?

Answer: சேந்தன் திவாகர நிகண்டு

1

10. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளை கடக்க பயன்படுத்தியவை எவை?

Answer: தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்

11. தமிழர்கள் கடல் பயணம் மேற்கோள்ள உதவியவை எது?

Answer: கலம், வங்கம், நாவாய்

12. பழங்காலத்தில் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி தற்போது எங்குள்ளது?

Answer: நியூசிலாந்து நாட்டு வெலிங்டன்அருங்காட்சியம்

13. | தமிழர்கள் கப்பல் கட்டும் கலைஞர்களை எவ்வாறு அழைத்தனர்?

Answer: கம்மியர்

14. "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: மணிமேகலை

15. தமிழர்கள் கப்பலின் நீர்மட்ட வைப்பிற்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்தினர்?

Answer: வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல்

16. தமிழர்கள் கப்பல்களின் பக்கங்களுக்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்திறனர்?

Answer: தேக்கு, வெண்தேக்கு

17. மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை ----- என்பர்?

Answer: வெட்டுவாய்

18. 'கண்ணடை 'என்பது எந்த மரத்தில் காணப்படும் உருவங்கள்?

Answer: இழைத்தை மரம்

19. கப்பலின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை எந்த நீட்டலளவை மூலம் கணக்கிட்டனர்?

Answer: தச்சுமுலம்

2

20. பெரிய படகுகளின் முன் பக்கத்தை எதன் தலையைப் போன்று வடிவமைத்தனர்?

Answer: யானை, குதிரை, அன்னம் இதை (கரிமுக அம்பி, பரிமுக அம்பி) என அழைத்தனர்

21. மரங்களையும், பலகைகளையும் இணைக்கும்போது அதன் இடையே எதை வைத்தனர்?

Answer: தேங்காய் நார், பஞ்சு

22. தமிழர்கள் கப்பலின் அடிப்பகுதியில் எதைக்கொண்டு பூசினர்?

Answer: சுண்ணாம்பும், சணலையும் கலந்து அரைத்து எண்ணெய் கலந்து பூசினர்

23. தமிழர்களின் கப்பல்கள் பழுதடையாமல் உழைத்ததை கண்டு வியந்து பாராட்டிய கடற்பயணி யார்?

Answer: மார்க்கோபோலோ (இத்தாலி)

24. மரத்திலான ஆணிகளை ----- என்பர்?

Answer: தொகுதி

25. "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியவர்?

Answer: வாக்கர்

26. பாய்மரக் கப்பல்கள் எதன் உதவியால் செலுத்தப்பட்டது?

Answer: காற்று

27. தமிழர் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்கள் எவை?

Answer: பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம்

28. பாய்மரக் கப்பலில் பயன்படும் கயிர்கள் எவை?

Answer: ஆஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு, பளிங்கைக் கயிறு, முட்டங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய்க்கயிறு

3

29. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் எது?

Answer: பரிபாடல்

30. கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் ----- எனப்படும்?

Answer: எரா

31. கப்பலுக்கு பயன்படும் குறுக்கு மரத்தை ----- என்பர்?

Answer: பருமல்

32. கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி ----- எனப்படும்?

Answer: சுக்கான்

33. கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு?

Answer: நங்கூரம்

34. சமுக்கு ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுவது எது?

Answer: சமுக்கு

35. சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று எந்த நூல் கூறுகிறது?

Answer: கப்பல் சாத்திரம்

36. கப்பல் செலுத்துபவர்களை என்ன பெயரில் அழைத்தனர்?

Answer: மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி

37. "நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி வளி தொழில்" என்னும் புறப்பாடல் அடியை பாடியவர் யார்?

Answer: வெண்ணியக்குயத்தியார்

38. கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தை காட்டுவதற்காக அமைக்கப்படுவது ----- ஆகும்?

Answer: கலங்கரை விளக்கம்

4

39. உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை கொண்டதாக உடையது?

Answer: கலங்கரை விளக்கம்

40. கலம் என்பதன் பொருள்?

Answer: கப்பல்

41. கரைதல் என்பதன் பொருள்?

Answer: அழைத்தல்

42. பெரிய கப்பலில் வரும் பொருள்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர் என்ற செய்தி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானுறு

43. "கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து "என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: புறநானுறு

44. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது?

Answer: ஓடம்

45. தொல்காப்பியம் கடற்பயணத்தை ----- வழக்கம் என்று கூறுகிறது?

Answer: முந்நீர்

46. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி?

Answer: சுக்கான்

47. கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள் ----- என அழைக்கப்படும்?

Answer: தொழுதி

48. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ----- ?

Answer: நங்கூரம்

49. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ----- எனக் குறிப்பிடப்படும்?

Answer: கண்ணடை

50. பொருத்துக a. எரா - 1. திசைகாட்டும் கருவி b. பருமல் - 2. அடிமரம் c. மீகாமன் - 3. குறுக்கு மரம் d. காந்த ஊசி - 4. கப்பலைச் செலுத்துபவர்

Answer: a - 2, b - 3, c - 4, d - 1

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்