1. இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் யார்?
Answer: சிதம்பரனார்
2. கப்பலோட்டிய தமிழர் என சிறப்பிக்கப்படுபவர் யார்?
Answer: சிதம்பரனார்
3. கொற்கை பெருந்துறையின் வழித்தோன்றல் துறைமுகம் எது?
Answer: தூத்துக்குடி துறைமுகம்
4. கொற்கை துறைமுகத்தில் யாருடைய கொடி பறந்தது?
Answer: பாண்டிய மன்னர்களின் கொடி
5. "வசையொழிய வாழ்வாரே வாழ்வார்" என்று கூறியவர் யார்?
Answer: திருவள்ளுவர்
6. சுதேச கப்பல் கம்பெனியை உருவாக்கியவர் யார்?
Answer: சிதம்பரனார்
7. சுதேச கப்பல் கம்பெனியின் செயலாளர் யார்?
Answer: சிதம்பரனார்
8. சுதேச கப்பல் வெள்ளோட்டம் பார்ப்பதற்காக எந்த துறைமுகத்தை நோக்கி சென்றது?
Answer: கொழும்புத் துறைமுகம்
9. வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் எந்த நாட்டில் பிறந்தது?
Answer: வங்க நாட்டில்
10. சுதேச கப்பல் கம்பெனியின் தலைவர் யார்?
Answer: பாண்டிதுரையர்
1
11. சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று கூறியவர் யார்?
Answer: பாலகங்காதர திலகர்
12. "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்ற பாடல் வரியை பாடியவர்?
Answer: பாரதியார்
13. 'சிதம்பரனாரின் பிரசாங்கத்தையும், பாரதியின் பாட்டையும் கேட்டல் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெரும் ' என்று கூறியவர் யார்?
Answer: நீதிபதி பின்ஹே
14. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைதண்டனை வழங்கிய நீதிபதி யார்?
Answer: நீதிபதி பின்ஹே
15. சிதம்பரனார் எந்த சிறைச் சாலைகளில் கொடும் பணி செய்தார்?
Answer: கோவைச் சிறையிலும் மற்றும் கண்ணனுர்ச் சிறையிலும்
16. சிதம்பரனார் செய்த தொழில்?
Answer: வக்கீல் தொழில்
17. சிதம்பரனார் யாருடன் உறவு கொண்டு செந்தமிழ் நூல்களை கற்றார்?
Answer: பாண்டிதுரையாருடன்
18. சிதம்பரனார் எதை படித்து தொல்லையெல்லாம் மறந்தார்?
Answer: தொல்காப்பியம்
19. சிதம்பரனார் எதை படித்து இன்னல்களையெல்லாம் மறந்தார்?
Answer: இன்னில்
20. ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் எழுதிய நூலை "மனம் போல் வாழ்வு" என்று தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
Answer: சிதம்பரனார்
2
21. சிதம்பரனார் இயற்றிய நூல்கள்?
Answer: மெய்யறிவு, மெய்யறம்
22. சிதம்பரனார் பெற்ற சிறைதண்டனை காலம் எவ்வளவு?
Answer: 6 ஆண்டுகள்
23. "பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்" என்ற பாடலை இயற்றியவர்?
Answer: சிதம்பரனார்
24. சொல்லின் செல்வர் என போற்றப்படுபவர் யார்?
Answer: இரா. பி. சேதுப்பிள்ளை
25. செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை இவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் யார்?
Answer: இரா. பி. சேதுப்பிள்ளை
26. இரா. பி. சேதுப்பிள்ளை சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்?
Answer: தமிழின்பம்
27. இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நூல்?
Answer: தமிழின்பம்
28. ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம் ஊரும் பேரும், மேடைப்பேச்சு போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Answer: இரா. பி. சேதுப்பிள்ளை
3