7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - நாடு-சமூகம் - இயல் மூன்று - நாடு-அதை-நாடு - தேசியம்-காத்த-செம்மல்

  Play Audio

1. தேசிய உடல், தெய்விகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் யார்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

2. 'வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர் ' யார்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

3. உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர் யார்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

4. சுத்தத் தியாகி என்ற தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் யார்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

5. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு?

Answer: 1908 அக்டோபர் - 30 நாள்

6. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் எங்கு பிறந்தார்?

Answer: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில்

7. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர்?

Answer: உக்கிர பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார்

8. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் யாரால் வளர்க்கப்பட்டார்?

Answer: இசுலாமியத் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டர்

9. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உயர்க் கல்வி பயின்ற இடம் எது?

Answer: மதுரை பசுமலை பள்ளியில்

10. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் படிப்பு ஏன் பாதியில் தடைபட்டது?

Answer: பிளேக் நோய் பரவியதால்

1

11. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ----- ----- ஆகிய இருமொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்?

Answer: தமிழ், ஆங்கிலம்

12. சிலம்பம், குதிரையேற்றம், துப்பாக்கிசுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற துறைகளில் ஆற்றல் உடையவராக விளங்கியவர்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

13. 1936 ஆண்டு விருதுநகரில் போட்டியிட முன்வந்தவர் யார்?

Answer: காமராஜர்

14. ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராஜர் பெயரில் வரி கட்டி அதைத் தேர்தலில் போட்டியிட வைத்தவர்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

15. வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டதின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர்?

Answer: பாலகங்காதர திலகர்

16. தென்இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

17. தேசியம் காத்த செம்மல் என்று திரு. வி. கா யாரைப் பாராட்டினர்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

18. வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்?

Answer: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

19. முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்த ஆண்டு?

Answer: கி. பி. 1935

20. முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் குரு யார்?

Answer: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

2

21. நேதாஜி என்னும் பெயரில் வார இதழை நடத்தியவர் யார்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

22. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் முதன் முதலில் உரையாற்றிய இடம்?

Answer: சாயல்குடி

23. முத்துராமலிங்கத்தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலை போருக்கு மிகவும் உதவும் என்று கூறியவர் யார்?

Answer: பெருந்தலைவர் காமராஜர்

24. இந்திய அரசால் முத்துராமலிங்கத்தேவருக்கு தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?

Answer: 1995

25. தென்னாட்டு சிங்கம் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

26. "முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது. உதடுகலிருந்து அல்ல "என்று கூறியவர் யார்?

Answer: மூதறிஞர் ராஜாஜி

27. "முத்துராமலிங்கத்தேவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது" என்று புகழ்ந்தவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

28. முத்துராமலிங்கத்தேவர் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்தாக ----- பாராட்டின?

Answer: வடஇந்திய இதழ்கள்

29. முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்?

Answer: 1937ஆண்டு

3

30. இந்தியத் தேர்தலில் இராமநாதபுரம் மன்னரை எதிர்த்து போட்டியிட்ட தேவர் அவர்களின் வெற்றியும், பொப்பிலி அரசரை எதிர்த்து போட்டியிட்ட வி. வி. கிரி அவர்களின் வெற்றியுமே இந்தியா மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தோம் என்று கூறியவர்?

Answer: இலண்டனில் பாரிஸ்டருக்கு படித்துவந்த தோழர் கே. டி. கே. தங்கமணி

31. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுகள்?

Answer: 1937, போட்டியின்றி வெற்றிபெற்ற ஆண்டு - 1946, 1952, 1957, 1962

32. முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்றத் நாடாளுமன்ற தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும் தேர்தலில் வெற்றிபெற்றார்?

Answer: 1962

33. பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாக கருதும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதற்காக மக்கள் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

34. முத்துராமலிங்கத்தேவர் குற்றப்பரம்பரைச் சட்ட எதிரிப்பு மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு?

Answer: 1934 ஆண்டு மே 12, 23 தேதிகளில்

35. குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு?

Answer: 1948

36. மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவு போராட்டத்தை முத்துராமலிங்கத்தேவர் நடத்திய ஆண்டு?

Answer: 1939

37. ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகளின் துயர் துடைக்கப் பாடுபட்டவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

38. தமக்கு சொந்தமான 32 1/2 சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை குத்தகை இல்லாமல் உழுபவர்க்கே பங்கிட்டு கொடுத்தவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

4

39. பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைக்கச்செய்தவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

40. 1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழ்ந்தவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

41. மதுரையில் நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆண்டு போராட்டம் நடத்தியவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

42. பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடியவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

43. முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்தில் மிகத்தேவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் எது?

Answer: அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர்

44. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் முத்துராமலிங்கத்தேவர் எந்த சிறையில் அடைக்கப்பட்டு போர் முடிந்த பிறகு விடுதலை செய்யப்பட்டார்?

Answer: மத்திய பிரதேசம் தாமோ நகர்

45. முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணில் வாழ்ந்த நாள்கள்?

Answer: 20, 075 நாட்கள்

46. முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்திற்குக்காகச் சிறையில் கழித்த நாள்கள்?

Answer: 4000 நாட்கள்

47. தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினை சிறையில் கழித்த தியாகச்செம்மல் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

48. முத்துராமலிங்கத்தேவர் எத்தனை முறை பர்மா சென்றுள்ளார்?

Answer: இரண்டு முறை (1936, 1955)

5

49. பர்மாவில் புத்த பிட்சுகளில் உயர்ந்தவர்களுக்கு பெண்கள் தங்கள் கூந்தலை நடை��ாதையாக விரித்து வரவேற்பு அளிப்பது வழக்கம். இது பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று கூறி அதனை ஏற்க மறுத்தவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

50. வித்யா பாஸ்கர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

51. பிரவன கேசரி என அழைக்கப்படுபவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

52. சன்மார்க்க சண்டமாருதம் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

53. இந்து புத்தசமய மேதை என அழைக்கப்படுபவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

54. பொதுத்தொண்டுக்கு இடையுறாக இருக்கும் எனக் கருதி திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

55. விவேகானந்தரின் தூதராக, நேதாஜியின் தளபதியாகவும் விளங்கியவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

56. சத்தியசீலராக, முருகபக்தராகவும் இருந்தவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

57. ஆன்மிகப் புத்திரராக, தமிழ்பாடும் சித்தராகவும் இருந்தவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

58. தமிழ்பாடும் சித்தராக, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக இருந்தவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

6

59. புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கோடையில் கர்ணனாகவும் விளங்கியவர் யார்?

Answer: முத்துராமலிங்கத்தேவர்

60. முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம்?

Answer: சாயல்குடி

61. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்?

Answer: நேதாஜி

62. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்?

Answer: திரு. வி. க

7

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்