1. ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது?
Answer: திருக்குறள்
2. ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடமை நெறியே ----- வாழும் நெறி?
Answer: திருவள்ளுவர் நெறி
3. "வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும்" இம்முறையை எடுத்துக் கூறியவர் யார்?
Answer: அப்பரடிகள்
4. "வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் "என்பதை வழிமொழிந்தவர் யார்?
Answer: காந்தியடிகள்
5. "உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர் யார்?
Answer: பாவேந்தர் பாரதிதாசன்
6. "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: புறநானுறு
7. ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது எது?
Answer: உழைப்பு
8. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார்?
Answer: தவத்திரு குன்றக்குடி அடிகளார்
9. குன்றக்குடி அடிகளார் எந்த திருமடத்தின் தலைவராக விளங்கினார்?
Answer: குன்றக்குடி
10. திருக்குறள் நெறியை பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாக கொண்டவர் யார்?
Answer: குன்றக்குடி அடிகளார்
1
11. நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்கள் இயற்றியவர் யார்?
Answer: குன்றக்குடி அடிகளார்
12. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதல்கள் எவை?
Answer: அருளோசை, அறிக அறிவியல்
13. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது ----- நெறி?
Answer: பொதுவுடமை
14. செல்வத்தின் பயன் ----- வாழ்வு?
Answer: ஒப்புரவு
15. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ----- என்றும் கூறுவர்?
Answer: மருந்து
16. "உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர்?
Answer: பாரதிதாசன்
17. எளிது என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?
Answer: அரிது
18. ஈதல் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?
Answer: ஏற்றல்
19. அந்நியர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?
Answer: உறவினர்
20. இரவலர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?
Answer: புரவலர்
2