7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஏழு - நயத்தகு-நாகரிகம் - திக்கெல்லாம்-புகழுறும்-திருநெல்வேலி

  Play Audio

1. பாண்டியர்களின் தலைநகரம் எது?

Answer: மதுரை

2. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் எது?

Answer: திருநெல்வேலி

3. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி "என்று கூறியவர் யார்?

Answer: திருஞானசம்பந்தர்

4. "தன்பொருநைப் புனல் நாடு" என்று கூறியவர் யார்?

Answer: சேக்கிழார்

5. திருநெல்வேலி மாவட்ட பகுதியில் சிறப்புமிக்க எந்த மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டது?

Answer: பொதிகை மலை

6. முற்காலத்தில் திருநெல்வேலி ----- என்னும் பெயரும் இருந்துள்ளது?

Answer: வேணுவனம்

7. வேணுவனம் என்பதன் பொருள் என்ன?

Answer: மூங்கில் காடு

8. "பொதியி லாயினும் இமய மாயினும்" என்று பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்து பாடியவர் யார்?

Answer: இளங்கோவடிகள்

9. இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் எந்த மலை புகழ்பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது?

Answer: குற்றாலமலை

10. குற்றால குறவஞ்சியை இயற்றியது யார்?

Answer: திரிகூட இராசப்பக் கவிராயர்

11. "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்" என்று குற்றால மலைவளத்தை பாடியவர் யார்?

Answer: திரிகூட இராசப்பக் கவிராயர்

12. திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்க செய்யும் ஆறு எது?

Answer: தாமிரபரணி

1

13. தாமிரபரணி நதியை முன்னர் எவ்வாறு அழைத்தனர்?

Answer: தன்பொருநை நதி

14. தாமிரபரணியின் கிளை ஆறுகள் எவை?

Answer: பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி

15. திருநெல்வேலி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது எது?

Answer: உழவுத்தொழில்

16. திருநெல்வேலியில் வாழை எங்கு பயிரிடப்படுகிறது?

Answer: ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்றவை

17. தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?

Answer: திருநெல்வேலி

18. கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழில் எந்த மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது?

Answer: திருநெல்வேலி

19. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த துறைமுகம் எது?

Answer: கொற்கை

20. கொற்கையில் நடந்த சிறப்பான தொழில் எது?

Answer: முத்துக்குளித்தல்

21. தூத்துக்குடியில் எங்கு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது?

Answer: ஆதிச்சநல்லூர்

22. "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: நற்றிணை

23. "கொற்கையில் பெருந்துறை முத்து" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer: அகநானுறு

2

24. கிரேக்க, உரோமாபுரி நாடுகளை சேந்தவர்களான யவனர்கள் எந்த முத்துக்களை விரும்பி வாங்கி சென்றனர்?

Answer: கொற்கை முத்து

25. பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றில் கரையில் அமைத்துள்ள எந்த மாநகரின் அமைப்பு சிறப்பானது?

Answer: நெல்லை மாநகர்

26. நெல்லையப்பர் கோவிலில் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என கூறியவர் யார்?

Answer: திருஞானசபந்தர்

27. "திங்கள் நாள்விழா மல்கு திருநெல் "எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

Answer: திருஞானசம்பந்தர்

28. கவர்ப்புரைத் தெரு என்றால் என்ன?

Answer: சிறைச்சாலை

29. மேல வீதியை அடுத்துக் ----- தெரு உள்ளது?

Answer: கூழைக்கடைத் தெரு

30. அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: அக்கசாலை

31. முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி ----- தெரு என்னும் பெயரில் அமைத்துள்ளது?

Answer: அக்கசாலை

32. தாமிரபரணி ஆற்றில் மேற்கு கரையில் அமைந்துள்ள நகர் எது?

Answer: திருநெல்வேலி

33. தாமிரபரணி ஆற்றில் கிழக்கு கரையில் அமைந்துள்ள நகர் எது?

Answer: பாளையங்கோட்டை

34. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எது?

Answer: பாளைங்கோட்டை

35. நெல்லை நகரின் மேற்கே உள்ள ஊர் எது?

Answer: பேட்டை

3

36. வணிகம் நடைபெறும் பகுதியை ----- என வழங்குதல் பண்டைய மரபு ஆகும்?

Answer: பேட்டை

37. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை மக்கள் வரவேற்ற இடம் எது?

Answer: பாண்டியபுரம்

38. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனின் மனைவி மங்கையர்க்கரசியை மக்கள் வரவேற்ற இடம்?

Answer: திருமங்கை நகர்

39. நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாயகரின் வழித் தோன்றல் யார்?

Answer: வீரராகவர்

40. வீரராகவரின் துணைவியார் பெயர் என்ன?

Answer: மீனாட்சி அம்மையார்

41. வீரராகவரின் மனைவி பெயரில் அமைந்த ஊர் எது?

Answer: மீனாட்சிபுரம்

42. திருநெல்வேலியில் கோட்டைகள் இருந்ததற்கான சான்றாக அமைந்த ஊர்கள் எவை?

Answer: பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை, செங்கோட்டை

43. அகத்தியர் எங்கு வாழ்ந்தார்?

Answer: பொதிகை மலையில்

44. திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்த புலவர்கள் யாவர்?

Answer: மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்

45. திருநெல்வேலியில் தமிழின் பால் ஈர்த்து அயல்நாட்டு அறிஞர்கள் யாவர்?

Answer: ஜி. யு. போப், கால்டுவெல், வீரமாமுனிவர்

4

46. திருநெல்வேலி ----- மன்னர்களோடு தொடர்பு உடையது?

Answer: பாண்டிய

47. இளங்கோவடிகள் ----- மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்?

Answer: பொதிகை

48. திருநெல்வேலி ----- ஆற்றின் கரையில் அமைத்துள்ளது?

Answer: தாமிரபரணி

49. பொருத்துக: தண்பொருநை

Answer: தாமிரபரணி

50. அக்கசாலை

Answer: பொன்நாணயங்கள் உருவாகும் இடம்

51. கொற்கை

Answer: முத்துக் குளித்தல்

52. திரிகூடமலை

Answer: குற்றாலம்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்