1. நாட்டில் பெரும் பஞசம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் எந்த பாடலாக பாடினர்?
Answer: கும்மிப் பாடல்கள்
2. கும்மிப் பாடல்கள் பேச்சித்தமிழில் அமைந்த இவை ----- என்று அழைக்கப்பட்டன?
Answer: பஞசக்கும்மிகள்
3. பஞசக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார்?
Answer: புலவர் செ. ராசு
4. காத்து நொண்டிச் சிந்து என்ற நூலை இயற்றியவர் யார்?
Answer: வெங்கம்பூர் சாமிநாதன்
5. கோணக் காத்துப் பாட்டு என்ற கவிதை எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது?
Answer: காத்து நொண்டி சிந்து
6. கோணக்காத்துப் பாடலில் புலவர் எந்தக் கடவுளை காக்குமாறு வேண்டுகிறார்?
Answer: முருகன்
7. முகில் என்பதன் பொருள் என்ன?
Answer: மேகம்
8. கெடிகலங்கி என்பதன் பொருள் என்ன?
Answer: மிக வருந்தி
9. சம்பிரமுடன் என்பதன் பொருள் என்ன?
Answer: முறையாக
10. சேகரம் என்பதன் பொருள் என்ன?
Answer: கூட்டம்
1
11. வின்னம் என்பதன் பொருள் என்ன?
Answer: தேசம்
12. வாகு என்பதன் பொருள் என்ன?
Answer: சரியாக
13. காலன் என்பதன் பொருள் என்ன?
Answer: எமன்
14. மெத்த என்பதன் பொருள் என்ன?
Answer: மிகவும்
15. காங்கேய நாடு என்பதன் பொருள் என்ன?
Answer: கொங்குமண்டலத்தில் 24நாடுகளுள் ஒன்று
16. வானில் கரு ----- தோன்றினால் மழை பொழியும் என்பர்?
Answer: முகில்
17. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ----- யும் ஒட்டிவிடும்?
Answer: காலனை
18. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: விழுந்தது + அங்கே
19. 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: செத்து + இறந்த
20. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: பருத்தியெல்லாம்
2