8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்-இன்பம் - தமிழ்-வரிவடிவ-வளர்ச்சி

  Play Audio

1. மனிதன் தன் கருத்தை பிறருக்கு அறிவிக்க எதை கண்டுபிடித்தான்?

Answer: மொழியை

2. மனிதன் மொழியை நிலைபெறச் செய்ய எதை உருவாக்கினான்?

Answer: எழுத்து

3. பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் இதுவே?

Answer: எழுத்து வடிவ தொடக்க நிலை

4. எழுத்து என்பது ஓலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது இவ்வரி வடிவத்தை ----- என்பர்?

Answer: ஓவிய எழுத்து

5. ஓர் ஒலிக்கும் ஓர் எழுத்து என உருவான நிலையை ----- என்பர்?

Answer: ஒலி எழுத்து நிலை

6. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு?

Answer: 'ஸ' எனும் வட எழுத்து காணப்படுகிறது. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை. எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை

7. எப்பொழுது தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தை பெற்றன?

Answer: அச்சுக்கலை தோன்றிய பின்பு

8. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் எங்கு காணமுடிகிறது?

Answer: கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும்

9. கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?

Answer: கி. பி (பொ. ஆ. மு) மூன்றாம் நூற்றாண்டு முதல்

10. செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?

Answer: கி. பி (பொ. ஆ. பி) ஏழாம் நூற்றாண்டு முதல்

1

11. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றல் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

Answer: இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து]

12. சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளின் எட்டாம் நுற்றாண்டுக்குப் முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்றுள்ள எழுத்து எது?

Answer: வட்டெழுத்துக்கள்

13. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து எது?

Answer: தமிலேழுத்துகள்

14. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

Answer: கண்ணெழுத்துகள்

15. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: சிலப்பதிகாரம்

16. பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துக்களை எதில் எழுதினார்?

Answer: கற்பாறை, செப்பேடு, ஓலை

17. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கத்தில் இருந்தன என்பதற்கான சான்றை எந்த கல்வெட்டு மூலம் அறியலாம்?

Answer: அரச்சலூர் கல்வெட்டு

18. நேர்கோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன?

Answer: கற்பாறை

19. பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்?

Answer: நேர்கோடுகள்

20. வளைகோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன?

Answer: ஓலை

21. ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்?

Answer: வளைகோடுகள்

2

22. சில எழுத்துகைளை அழகுப்படுத்துவதற்காக அவற்றின் ----- பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது?

Answer: மேற்பகுதி

23. எகர ஒகர குறில் எழுத்துக்களைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்து வந்துள்ளது?

Answer: தொல்காப்பியர்

24. அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை எவ்வாறு கருதப்பட்டன?

Answer: நெடிலாகக்

25. ஐகார எழுத்துக்களை குறிப்பிட எழுத்துக்களின் முன் ----- புள்ளி இட்டனர்?

Answer: இரட்டைப் புள்ளி

26. எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ----- வரிசை எழுத்துக்களாக கருதப்பட்டன?

Answer: ஓளகார வரிசை

27. நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது?

Answer: துணைக்கால்

28. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது?

Answer: இனைக்கொம்பு

29. ஓளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது?

Answer: கொம்புக்கால்

30. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்தவர் யார்?

Answer: வீரமாமுனிவர்

3

31. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகளை சீர்திருத்தம் செய்தவர் யார்?

Answer: பெரியார்

32. ணு, ரு, னு என்ற எழுத்துகளை ணா, றா, னா என மாற்றியவர் யார்?

Answer: பெரியார்

33. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற ----- காரணமாக அமைந்தது?

Answer: அச்சுக்கலை

34. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ----- என அழைக்கப்படுகிறது?

Answer: வட்டெழுத்து

35. தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் யார்?

Answer: தந்தை பெரியார்

36. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ----- என அழைக்கப்பட்டன?

Answer: கண்ணெழுத்துக்கள்

37. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை கலைந்தவர் யார்?

Answer: வீரமாமுனிவர்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்