1. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
Answer: திருத்தக்கத் தேவர்
2. ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையை பாடுவனவாய்க் ----- உருவாயின?
Answer: காப்பியங்கள்
3. சீவகனை தலைவனாக கொண்டு தோன்றிய காப்பியம் எது?
Answer: சீவக சிந்தாமணி
4. இன்பங்களை துறந்து துறவு பூனவேண்டும் என்பதே எந்த காப்பியத்தின் மையக்கருத்தாகும்?
Answer: சீவக சிந்தாமணி
5. திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணியில் எந்த நாட்டின் செழிப்பை பற்றி கூறுகிறார்?
Answer: ஏமாங்கத நாடு
6. வருக்கை என்பதன் பொருள் என்ன?
Answer: பலாப்பழம்
7. மால்வரை என்பதன் பொருள் என்ன?
Answer: பெரியமலை
8. கெழுநிதி என்பதன் பொருள் என்ன?
Answer: திரண்ட நிதி
9. மருப்பு என்பதன் பொருள் என்ன?
Answer: கொம்பு
10. வெறி என்பதன் பொருள் என்ன?
Answer: மனம்
11. கழனி என்பதன் பொருள் என்ன?
Answer: வயல்
12. இரிய என்பதன் பொருள் என்ன?
Answer: ஓட
13. சூல் என்பதன் பொருள் என்ன?
Answer: கரு
14. கொடியனார் என்பதன் பொருள் என்ன?
Answer: மகளிர்
15. அடிசில் என்பதன் பொருள் என்ன?
Answer: சோறு
16. நற்றவம் என்பதன் பொருள் என்ன?
Answer: பெருந்தவம்
17. வெற்றம் என்பதன் பொருள் என்ன?
Answer: வெற்றி
18. இரந்துகேட்பவருக்கு இல்லையென்னாது வாரி வழங்கும் செல்வர்களை போன்றது எது?
Answer: வெள்ளம்
19. மனம் கமழும் காலனியில் பேரொலி கேட்டு எந்த மீன்கள் கலைந்து ஓடுகின்றன?
Answer: வரால் மீன்கள்
1
20. உழுநர் என்பதன் பொருள் என்ன?
Answer: உழவர்
21. ஏமாங்கத நாட்டின் கருக்கொண்ட பச்சை பாம்பு போல எது தோற்றமளிக்கிறது?
Answer: நெற்பயிர்கள்
22. உண்மையான தவம் புரிவோருக்கு இல்லறம் நடத்துவோருக்கும் இனிய இடமாக உள்ள நாடு எது என்று திருத்தக்கதேவர் கூறுகிறார்?
Answer: ஏமாங்கத நாடு
23. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று?
Answer: சீவக சிந்தாமணி
24. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?
Answer: சீவக சிந்தாமணி
25. சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள உட்பிரிவின் பெயர் என்ன?
Answer: இலம்பகம்
26. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களை கொண்டது?
Answer: 13
27. மணநூல் என அழைக்கப்படும் நூல் எது?
Answer: சீவக சிந்தாமணி
28. திருத்தக்கதேவர் எந்த சமயத்தை சேர்ந்தவர்?
Answer: சமணம்
29. திருத்தக்கதேவர் இன்பசுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்ற வகையில் எக்காப்பியத்தை இயற்றினார்?
Answer: சீவக சிந்தாமணி
30. திருத்தக்கதேவர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்?
Answer: ஒன்பதாம் நூற்றாண்டு
31. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக திருத்தக்கதேவர் எந்த நூலை இயற்றினார்?
Answer: நரிவிருத்தம்
2